சில ஆண்டுகளுக்கு முன் கேரளம் எதிர்கொண்ட வெள்ளம், 1924ஆம் ஆண்டு பெருவெள்ளத்துடன் ஒப்பிடப்பட்டது. தமிழ்நாட்டில் மேற்கு மலை முதல் கிழக்குக் கடற்கரை வரை பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம் அது. 1924இல் ஜூலை 16 அன்று மேற்கில் வயநாடு, வாயித்திரி பகுதிகளில் 34 செ.மீ. 17இல் 53.34 செ.மீ. 12 - 24 ஆம் தேதி வரை 263 செ.மீ. மழை பதிவானது. தென் கர்நாடகத்தில் ஜூலையில் 97-155 செ.மீ. மாமழை கொட்டியது.
காட்டுப்புல்லும் மலைக்காடும் நீரைத் தேக்கவும், பாய்ச்சலின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் இயற்கையாக உள்ள அமைப்புகள். ஆனால், அவை பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, பிரிட்டிஷ் அரசும் அந்நிய நிறுவனங்களும் அவற்றை அழித்துவிட்டிருந்த தால் மேற்கில் பொழிந்த மாமழை கிழக்காகப் பெருக்கெடுத்துப் பாய்ந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்