புதுக்கோட்டை சமஸ்தானம் பத்திரிகை இல்லாத நாடாக இருந்து வந்தது. சமஸ்தானத்தில் நடந்தேறிய பல்வேறு மாநாடுகளில் புதுக்கோட்டையில் பத்திரிகை தொடங்கப்பட வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேறி வந்தன. பி.எஸ்.விசுவநாத அய்யர் அவரது சகோதரர் பி.எஸ்.சுப்பிரமணிய அய்யர் ஆகியோர் மூலமாகப் பத்திரிகைக் கனவு செயல்வடிவம் கண்டது. 1924ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று புதுக்கோட்டை சமஸ்தானத்தில் முதல் பத்திரிகை ‘ஜனமித்திரன்’ தொடங்கப்பட்டது. வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும் வாரப் பத்திரிகை என்கிற குறிப்போடு, இந்த இதழ் வெளிவந்தது. இதே ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மக்களைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டசபை அமைக்கப்பட்டது. இந்த இதழின் ஆசிரியராக இருந்தவர் பி.எஸ்.சுப்பிரமணிய அய்யர். புதுக்கோட்டையில் முதலில் ஜனமித்திரன் பிரஸ் தொடங்கிய இவர், அந்த பிரஸிலிருந்து இந்த இதழைக் கொண்டு வந்தார். இந்த இதழ் சமஸ்தானக் காலத்தில் நடந்தேறிய அரசு நிகழ்வுகளை வெளியிட்டு வந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்