பலி ஆடுகளா இந்திய இளைஞர்கள்?

By செய்திப்பிரிவு

ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுப் போர் முனையில் உயிரிழக்கும் அவலம் தொடர்வது மிகுந்த வேதனையளிக்கிறது. உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டிருந்த மேலும் இரண்டு இந்திய இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கும் தகவல் உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், ரஷ்ய ராணுவத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் என்னும் குரல்கள் வலுத்திருக்கின்றன.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்த தேஜ்பால் சிங் (29), அடையாளம் உறுதிசெய்யப்படாத இன்னொருவர் என ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்துவந்த இருவர், உக்ரைன் போர் முனையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் தேஜ்பால் சிங், மார்ச் 12ஆம் தேதியே உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE