டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருந்த டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கியிருப்பது ஜனநாயகத்துக்கு வலுசேர்க்கும் முக்கிய நடவடிக்கை. மக்களவைத் தேர்தலில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள ஏதுவாக இந்தப் பிணை வழங்கப்பட்டிருப்பது, ஜனநாயக நடைமுறை மீது நீதித் துறை காட்டும் அக்கறையின் வெளிப்பாடு என்றே சொல்ல வேண்டும்.
இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட நிலையில், பல முறை அழைப்பாணை அனுப்பியும் ஆஜராகாமல் தவிர்த்துவந்த கேஜ்ரிவால், மார்ச் 21இல் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்