சொல்… பொருள்… தெளிவு: இந்தியாவில் வெப்ப அலை

By ஆனந்தன் செல்லையா

வெப்ப அலையின் தாக்கம் குறித்த உரையாடல் தற்போது தீவிரமடைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வழக்கத்துக்கு மாறாக வெப்பமான வானிலை தொடர்ச்சியாகச் சில நாட்களுக்கு நீடிப்பது வெப்ப அலை எனப்படும். சமவெளிப் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸ் அல்லது அதற்கு மேல் அதிகரிப்பது; மலைப்பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஷியஸ் அல்லது அதற்கு மேல் அதிகரிப்பது; கடலோரப் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்ஷியஸ் அல்லது அதற்கு மேல் இருப்பது வெப்ப அலையாகக் கருதப்படுகிறது.

வெப்ப அலை இரண்டு காரணங்களால் உருவாகிறது. ஒன்று, வெளியிலிருந்து அதிக வெப்பநிலை கொண்ட காற்று உள்ளே வர வேண்டும் அல்லது அப்பகுதியிலேயே ஏதோ ஒரு பொருள் வெப்பத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். ஒரு பகுதியில் நிலப்பரப்பின் வெப்பநிலை உயரும்போது, அதையொட்டி வீசும் காற்றும் வெப்பமடைகிறது அல்லது மேலிருந்து கீழிறங்கும் வழியில் காற்று அழுத்தப்படுவதால், நிலப்பரப்பை ஒட்டி வெப்பக் காற்று உருவாகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE