திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அம்பாசமுத்திரம் சரகக் காவல் உதவிக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சர்ச்சைக்குரிய காவல் துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைகள்கூட எடுக்கப்படுவதில்லை என்ற விமர்சனத்துக்கு இந்த உத்தரவு வலுசேர்க்கிறது.
2023 மார்ச் 23 அன்று கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிலர், தங்கள் பற்கள் உடைக்கப்பட்டதாகவும் விதைப்பைகள் நசுக்கப்பட்டதாகவும் காணொளி மூலம் தெரிவித்தது, சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. வேறு சில வழக்குகளின் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிலரும் இதேபோல் சித்ரவதைக்கு ஆளானதாகக் குற்றம்சாட்டினர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்