செய்யாறு சிப்காட் விவகாரம்: அரசின் தவறான முன்னுதாரணம்!

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் மூன்றாவது சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக 3,174 ஏக்கர் விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிராகப் போராடிய விவசாயிகளில் 7 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்துசெய்திருப்பதன் மூலம், இந்த விவகாரத்தில் அரசு தன்னுடைய தவறைத் திருத்திக்கொண்டுள்ளது. எனினும், இதுபோன்ற விவகாரங்களை இன்னும் கவனமாகக் கையாள வேண்டியது அவசியம் எனும் குரல்களை அரசு செவிமடுக்க வேண்டும்.

செய்யாறில் மூன்றாம் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக 11 கிராமங்களில் பரந்து விரிந்துள்ள நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு தொடங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேல்மா கிராமக் கூட்டுச் சாலையில் ஜூலை 2 முதல் விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். நவம்பர் 4 அன்று சிப்காட் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக 96 பெண்கள் உள்பட 147 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் 19 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்
பட்டனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்