சில அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களின் ஐபோன்களில் அரசு சார்ந்த தாக்குதலாளர்கள் ஊடுருவல் நிகழ்த்தியதாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கைத் தகவல் அனுப்பிய நிகழ்வு, இந்திய அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சசி தரூர் (காங்கிரஸ்), மஹுவா மொய்த்ரா (திரிணமூல் காங்கிரஸ்), பிரியங்கா சதுர்வேதி (சிவசேனா) உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரின் ஐபோன்களுக்கு அக்டோபர் 31 அன்று இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக, அவர்களில் பலர் எக்ஸ் தளத்தில் பதிவுசெய்தனர். ராகுல் காந்தி உள்ளிட்டோர் செய்தியாளர் சந்திப்பில் இது குறித்துப் பேசினர். இந்தியா மட்டுமல்லாமல், 150 நாடுகளைச் சேர்ந்த ஐபோன் பயனாளர்களுக்கு இப்படியான எச்சரிக்கைத் தகவல் அனுப்பப்பட்டது பின்னர் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அறிவித்துவிட்டது. இது தொடர்பான விசாரணையில் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்திய நிலையில், ஆப்பிள் நிறுவனமும் விசாரணையில் இணைந்திருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்