சீனாவின் ஹாங்சோவில் நடந்துமுடிந்த 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா முதல் முறையாக நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. இந்தியாவின் சார்பில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்று நாட்டைப் பெருமைப்படுத்தியதோடு, பதக்கங்களையும் வென்று திரும்பியுள்ள வீரர், வீராங்கனைகள் பாராட்டுக்குரியவர்கள். மதிக்கத்தக்க இந்த வெற்றி, 2024இல் பாரிஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.
2018இல் இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வென்ற 70 பதக்கங்களே, இந்தியாவின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது 107 பதக்கங்களை (28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம்) வென்று சீனா, ஜப்பான், தென் கொரியாவுக்கு அடுத்தபடியாகப் பதக்கப் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்திருப்பது, விளையாட்டுத் துறையில் இந்தியா வளர்ந்துவருவதைக் காட்டுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்