மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவிலிருந்து 60 பேரை தென்னிந்திய மாநிலங்களில் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்காக, சுற்றுலா ரயில் பெட்டியை அம்மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் ஒன்று ஆகஸ்ட் 17 அன்று முன்பதிவு செய்திருந்தது.
வெவ்வேறு ரயில்களில் இணைக்கப்படும் இந்தப் பெட்டியில் பயணித்த பயணிகள் ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஆன்மிகத் தலங்களைத் தரிசித்த பின்னர், தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்குச் சென்று திரும்பிச் செல்லும் வழியில் மதுரைக்கு 26ஆம் தேதி அதிகாலை வந்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்