அசர்பைஜான் நாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 206 வீரர்கள் பங்கேற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார், 18 வயதே நிரம்பிய பிரக்ஞானந்தா. ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரும் சர்வதேசத் தரவரிசையில் முதல் நிலை வீரருமான நார்வேயைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சனிடம் (32) இறுதிப் போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இதயங்களை வென்றிருக்கிறார் இந்திய வீரரான பிரக்ஞானந்தா.
உலகக் கோப்பை செஸ் போட்டித் தொடர், 2000 ஆண்டு முதல் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. முதல் இரண்டு தொடர்களில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் கோப்பையை வென்றார். அவருக்குப் பிறகு இந்திய வீரர்கள் ஒருவரும் உலகக் கோப்பைத் தொடரை வென்றதில்லை. இந்த முறை இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறியபோது, 21 ஆண்டுகள் கழித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர், மிக இளைய வீரர் ஆகிய பெருமைகளை அவர் பெற்றார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்