டெல்லி சேவைகள் திருத்த மசோதா 2023, நாடாளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. டெல்லியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனம் தொடர்பான நிர்வாகச் சேவைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு கடந்த மே மாதம் அளித்திருந்த உத்தரவுக்கு மாறாக, இந்த மசோதா பாஜக அரசால் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டும்விட்டது.
டெல்லியில் 2015இல் ஆட்சிக்கு வந்தது முதலே அதிகாரிகள் மீது தங்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்று கூறிவந்தது ஆம் ஆத்மி கட்சியின் அரசு. நிர்வாகச் சேவைகளில் யாருக்கு அதிகாரம் என்பதில் துணைநிலை ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல் போக்கு நிலவிவந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்