புவி வெப்பமாதலின் யுகம் முடிந்து ‘புவி கொதிக்கும்’ (global boiling) காலகட்டம் தொடங்கியிருப்பதாக, ஐ.நா. அவையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் ஜூலை 27 அன்று பேசியுள்ளார். இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள மனித குல வரலாற்றில், 2023 ஜூலை மாதம் மிக அதிக வெப்பம் நிலவிய மாதமாகப் பதிவாகியிருப்பதாகக் காலநிலை அறிவியலாளர்கள் அறிவித்துள்ளதன் பின்னணியில், குட்டர்ஸ் இப்படிப் பேசியிருக்கிறார். புவியின் வடக்கு அரைக்கோளத்தில் (Northern Hemisphere) நிலவிய கடும் வெப்பத்தை, ‘கொடூரக் கோடை’ என்று குறிப்பிட்ட அவர், ‘ஒட்டுமொத்தப் பூவுலகுக்கும் இது பேரழிவு’ என எச்சரித்துள்ளார்.
ஜூலை மாதம் தொடங்கியதிலிருந்தே உலகின் பல்வேறு பகுதிகளில், இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் அதிக வெப்பம் நிலவிய இந்த ஜூலை மாதம், ‘குறிப்பிடத்தகுந்ததும் முன்கணித்து இராததும்’ ஆக இருந்தது என உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் (WMO), ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் காலநிலை மாற்றத்துக்கான சேவை (C3S) ஆகிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்