கொங்குவெளியில் கோடைக்காற்று விசையுடன் வீசிய காற்றுக் காலம். தாராபுரம் பிஷப் தார்ப் கல்லூரி. இளங்கலை மூன்றாம் ஆண்டின் தொடக்க நாள். எங்கள் துறைத் தலைவர் சென்னியப்பன் வகுப்பறையில் அனைவரிடமும் “எதிர்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள்?” எனக் கேட்டார். மாணவ மாணவியர் அவரவர் லட்சியத்தைச் சொல்லி வந்தனர். என் முறை வந்தது. நான் எழுந்து நின்றேன். “எழுத்தாளனாகப் போகிறேன் சார்” என்றேன்.
சக மாணவ, மாணவியரின் பார்வை ஒருகணம் என் மீது திரும்பியது. துறைத் தலைவர் என்னைத் தீர்க்கமாகப் பார்த்தார். “உன்னால முடியுமா…?” என்று கேட்டார்.
“முடியும் சார்” என்றேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்