எழுத்தாளர் ஆனேன்: அ.வெண்ணிலா | மாதாந்திரச் சுழற்சியின் பாரம்

By Guest Author

உடல் வழியாகப் பெரும் அனுபவத்தையே மனிதர்கள் பெரும்பாலும் தங்கள் அனுபவமாக, நினைவுகளாகக் கொள்கிறார்கள். எழுத்தும் கலைகளும் உடல்மூலம் மனம் பெறும் அனுபவத்தைப் பிரதிபலிப்பவை. உடலைக் கொண்டாடுவது படைப்பூக்கத்தின் மூலாதாரம். துரதிர்ஷ்டவசமாக, உடலைக் கொண்டாடுதல் என்ற பிரபஞ்ச விதி, இந்திய/தமிழ்ப் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. குறிப்பாக, முந்தைய தலைமுறை/ சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த பெண்களுக்கு. உடலைச் சுமையாக, அருவருப்பாக, வெகுஜனத்தின் பார்வையில் இருந்து பொத்திப் பாதுகாக்க வேண்டிய பொருளாகப் பார்க்கும் நிர்ப்பந்தத்தில் இருந்து வளர்ந்தவர்கள் அவர்கள்.

ஒரே வீட்டுக்குள் நான்கைந்து அடுப்படிகளை உருவாக்கி, ஐந்தாறு குடும்பங்கள் வாழ்ந்த நாள்கள். கூட்டுக் குடும்பம் என்ற சமூகவியல் வரையறையில் இது உள்ளடங்குமா என்று தெரியாது. குடும்பத்து ஆண்கள் காலையில் வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். ரெண்டுங்கெட்டானாக வேலைக்கோ, படிப்பதற்கோ சுணங்கிக் கிடக்கும் நோஞ்சான் பையன்கள் யாராவது பகலில் வீட்டில் இருக்கக்கூடும். பெண்கள் நெற்றியில் ஒரு கண்ணும், முதுகில் இரண்டு கண்களுமாக நடமாடுவார்கள். உடலுக்கான தனிமை என்பதோ, அந்தரங்கம் என்பதையோ அனுமதிக்காத சுவர்கள், மனிதர்கள். ‘தீட்டு வரலையா இன்னும்?’, ‘தீட்டுத் துணியை இப்படியா கண்ணுல பட்ற மாதிரி காயப்போடுவா?’, ‘தீட்டுத் துணியைப் பாத்தா, பால் குடிக்கிற குழந்தைக்கு வயித்துல தங்காது’ என்று விளக்கி விளக்கிப் பேசுவார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE