அரசியல் வன்முறை என்னும் ஆபத்தான ஆயுதம்

By செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் ஜூலை 8 அன்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. ‘மேற்கு வங்க மக்கள் மனதில் திரிணமூல் காங்கிரஸ் மட்டும்தான் இருக்கிறது’ என மம்தா பெருமிதம் தெரிவித்திருக்கிறார். ஆனால், இந்தத் தேர்தலையொட்டி நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் ஏராளமானோர் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது.

கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த அரசியல் வன்முறைச் சம்பவங்களில் மேற்கு வங்கத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். வாக்குப்பதிவு நாளில் மட்டும் 17 பேர் கொல்லப்பட்டனர். பல இடங்களில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் வாக்குச்சாவடிக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டது, எதிர்க்கட்சி முகவர்கள் துரத்தியடிக்கப்பட்டு, ஆளுங்கட்சியினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியது எனத் தேர்தல் வன்முறையில் சாத்தியமுள்ள அனைத்தும் அரங்கேறியிருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE