பொங்கிப் பிரவாகமெடுத்தோடும் நதியின் வேகமுமில்லை; பாறை இடுக்கில் தேங்கிக் கிடக்கும் மழை நீரின் மெளனமுமில்லை; முன்பின் அறிமுகமில்லாத வேளையிலும் வாழ்வின் போக்கில் எதிர்ப்படும் மனித முகம் பார்த்து ஒரு சிநேகப் புன்னகையை உதிர்த்துவிட்டுப் போகும் மனிதத்தின் குணமே ஆசுவின் அசலான கவிதை முகமாக உள்ளது. முற்போக்குக் கவிதைகள் புதிய உத்வேகத்தோடு எழுதப்பட்ட 80-களின் தொடக்கக் காலத்தில் கவிதை எழுதத் தொடங்கியவர் ஆசு.
உழைக்கும் பாட்டாளி மக்களின் அன்றாட வாழ்விலிருந்து தனக்கான கவிதை மொழியையும், கவிதைகளையும் கண்டெடுத்த அவரது முதல் கவிதை நூல் ‘ஆறாவது பூதம்’. 1997இல் வெளியான முதல் கவிதை நூல் தொடங்கி, 2021 வரை கடந்த 25 ஆண்டுகளில் வெளியான எட்டு கவிதை நூல்களே ‘ஆசு கவிதைகள்’ எனும் 688 பக்க அளவிலான தொகுப்பாக வெளிவந்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்