நூல் வெளி: அரசியல் ‘மோதல் கொலை’ ஒரு நேரடி அனுபவம்

By சி.மகேந்திரன்

மரணத்தோடு போராடிய அனுபவங்களை, நக்சல்பாரி இயக்கத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றிய ஒருவர், இந்த நூலில் பதிவுசெய்துள்ளார். தருமபுரி, திருப்பத்தூர் பகுதிகளில் ‘தீ’ கம்யூனிஸ்ட்டுகள் என்று ஊடகங்களால் பயமுறுத்தப்பட்டு, மர்ம முடிச்சுகளுடன் இது நாள்வரை கட்டிவைக்கப்பட்டிருந்த நக்சல்பாரி இயக்கத்தின் அன்றைய உண்மைச் செயல்பாடுகளை அவிழ்த்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர் வெ.ஜீவகிரிநாதன்.

1980, ஆகஸ்ட் 6, நக்சல்பாரி இயக்கத்தைச் சார்ந்த ஒருவரை அழைத்து வரும்போது, ஜீப்பில் குண்டு வெடித்து நான்கு காவலர்கள் இறந்தனர். நக்சல்பாரிகளை அடக்குவதற்கென்று ‘கியூ பிராஞ்ச்’ என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. இதை ஒட்டி, ‘மோதல் கொலை’ கூடுதலாக நடக்கத் தொடங்குகிறது. பட்டப்படிப்பு மாணவரான நூலாசிரியர் வெ.ஜீவகிரிநாதன் இந்த வட்டத்திற்குள் சிக்கிவிட்டார். இது பற்றி நூலாசிரியரின் நேரடி வாக்குமூலம்:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE