இலக்கியப்பட்டி: பர்ரா, பார்ரா

By செய்திப்பிரிவு

தென்றல், மயில், முதிர்கன்னிகள் எனக் கவிதைகள் எழுதத் தொடங்கியிருந்த பட்டிவீரன்பட்டி தென்றல்தாசனுக்கு, அந்தப் புரட்சிக் கூட்டத்துக்குப் போன பிறகுதான் ‘கவிதைக் கண்’ திறந்துகொண்டது. சமூகம்தான் கவிதைக்கு மையமாக இருக்க வேண்டுமென அங்கு ஒரு வட்டார வழக்குக் கவிஞர் உரைத்ததை, சம்மூகம்தான் கவிதை மையம் எனத் தட்டுத் தடுமாறிப் புரிந்து, ‘அட! கெக்கிப்பட்டி சம்மூகம் இவ்ளோ பெரிய ஆளா?’ என ஆச்சரியப்பட்டுப் போனான். தென்றல்தாசனைப் ‘புரட்சிப் புயலோன்’ என மாற்றிக்கொண்டு பேனாவும் கையுமாக கெக்கிப்பட்டிப் போகும் அஞ்சரக்குள்ள வண்டியைப் பிடித்துப் பறந்தான்.

கவிதை மயக்கத்திலிருந்தவன் கண்ணும் மயங்கிவிட, ஊர் தப்பி நவீனயூரில் இறங்கித் திடுக்கிட்டுப் போனார். எங்கு பார்த்தாலும் எலியட்டும் எஸ்ராபவுண்டும் உருட்டிக்கொண்டிருந்தார்கள். ஊர்த் தெரு மாடுகள் ‘மா...’ எனக் கத்துவதின் அகத்தில் கவிதை இருக்கிறது, அதன் தொழுத்தில் கவிதை இருக்கிறது என நவீனயூர்க்காரர்கள் கம்பி கட்டிக்கொண்டிருந்தார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE