பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட் (George Luzerne Hart, III) எனும் பெயர் இன்று பலரும் அறிந்த ஒன்று. இதற்கு, ‘தமிழ், செம்மொழி என அறிவிக்கப்படுவதற்கு உரிய அத்தனை தகுதிகளையும் உடையது’ என இவர் எழுதிய பரிந்துரைக் கடிதமும் ஒரு காரணம். இவ்வாறாகப் பரிந்துரைத்த இப்பேராசிரியர் யார்? இவர் தமிழுக்கு, குறிப்பாகச் செவ்வியல் தமிழுக்கு ஆற்றியுள்ள பங்களிப்புகள் என்னென்ன?
அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் எல்.ஹார்ட், தமிழ், சம்ஸ்கிருதம், ரஷ்யன், பிரெஞ்சு, ஜெர்மன், லத்தீன், கிரேக்கம் முதலிய மொழிகளில் புலமை உடையவராக விளங்குகிறார். 1970இல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதத்தில் (Sanskrit and Indian Studies) முனைவர் பட்டம் பெற்றார். கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதும் மத்திய அரசின் குறள் பீட விருதும் இவரது தமிழ்ப் பணிக்காக அளிக்கப்பட்டுள்ளன. இவரது ஆய்வு தமிழ், சம்ஸ்கிருதச் செவ்விலக்கியங்களுக்கு இடையேயான மிக முதன்மையான ஒப்பிலக்கிய ஆய்வாக அமைகின்றது. ‘நான் இயற்பியல் படிக்கவே ஹார்வர்டில் சேர்ந்தேன். என் அறைத் துணைவர் சம்ஸ்கிருதம் படித்தார். உலகின் மிகப் பழமையான ஒரு மொழியைப் படிப்பதாக அவர் சொன்னதும் அந்த வகுப்பிற்குச் சென்றேன். சென்ற இடத்தில் அதைவிடவும் தொன்மையானது தமிழ் என்று தெரிந்ததும் தமிழால் ஈர்க்கப்பட்டேன்’ எனப் பேட்டி ஒன்றில் தனது தமிழார்வம் பற்றிக் கூறியிருக்கிறார் ஹார்ட்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago