இலக்கியம்

பேப்பர் போடுபவர்களின் கதை | நூல் நயம்

செய்திப்பிரிவு

நவீனத் தமிழ்ப் படைப்பிலக்கியச் சூழலில் ஆடு மேய்த்தலைதல், மீன் பிடித்துக் கரைதல், விவசாயம் செய்து ஓய்ந்துபோதல், கட்டட வேலை செய்து நசிந்து போதல் பற்றியெல்லாம் நாவல்கள் பல வந்திருக்கின்றன. ஆனால், பேப்பர் போடுபவர்களின் வாழ்நிலை பற்றிப் பதிவுசெய்வதில் முதன்மை இடம் வகிப்பது எழுத்தாளர் அறிவுமணியின் ‘சார்… பேப்பர்’ என்னும் இந்த நாவல்.

ஒவ்வொரு நாளின் அதிகாலை நேரத்தில் ‘பேப்பர்’ என்ற சத்தம் கேட்டு விழித்தெழக் கூடியவர் நம்மில் பலர் இருப்பர். ஆனால், வாசலில் விழும் பேப்பரை எடுக்கும் ஒருவர் தம் வாசல்வரை வந்துபோகும் பேப்பர்க்காரரை, அவர் யார், பெயர் என்ன, எதுவரை படித்துள்ளார், என்ன சம்பளம், எத்தனை வருடமாக இந்த வேலை, என என்றேனும் கேட்டறிந்ததுண்டா?. அன்றைய செய்திகளை மட்டும் சுடச்சுட அறிய, நம்மில் பலரும் ஆர்வம் கொள்ளும் நிலையில், பேப்பர்போடும் எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பட்டவர்த்தனமாக வெளிப்​படுத்​துகிறது இந்​நாவல்.

பேப்பர் முகவர்களுக்கும், பேப்பர் போடுபவர்களுக்கான உறவு இந்த நாவலில் சொல்லப்பட்டுள்ளது. வளரிளம் பரு​வத்​தின​ரான சொக்​கன், செவப்​பன் ஆகியோரின் எளிய வாழ்​வைக் கூறு​வ​தாக அமைந்​திருப்​பது​தான் இந்​நாவலின் கதை.

ஒருங்​கிணைந்த மதுரை​யில், மாபெரும் மாட்​டுச் சந்​தைக்​குப் பெயர் பெற்​றிருந்த வாடிப்​பட்டி கிராமம் ஒரு நவீனச் சிறுநகர​மாக உரு​மாறும்​போது நிகழக்​கூடிய மாற்​றங்​களை தம் உட்​கிடக்​கைகளாக்​கித் தொடங்​கு​கிறது இந்​நாவல். நான்​கு​வழிச் சாலை​யின் உரு​வாக்​கம், நவீனத் தொலைத் தொடர்​புச் சாதனங்​களின் வரு​கை, சிறு, பெரு கல்வி நிறு​வனங்​களின் பரவல், வகை வகை​யான வாக​னங்​களின் வரத்து முதலியன நடுத்தர வர்க்​கத்​தார் இங்​கு​வந்து நிலை​கொள்​ளப் பின்​புலங்​களாக அமைய, இவர்​களுக்கு ஊழி​யம் செய்​ய​வெனத் தன்​னியல்​பாகவே உதிரி மனிதர்​கள் உரு​வாகலாகின்​றனர். இத்​தரப்​பினரில் ஒரு வகை​யினர்​தான் சொக்​கன், செவப்​பன் என்​கிற பேப்​பர் போடும் பையன்​கள்.

பணபலமற்​று, எளிய சாதி​யப் பின்​புலங் கொண்​டு, நலிவுற்ற குடும்​பப் பின்​னணியி​லிருந்து புறப்​பட்டு வந்​திடும் வளரிளம் பரு​வத்​தின​ரான சொக்​கன், செவப்​பன் என்​போர் தம் பணிச் சூழலின்​போது அன்​றாடம் சந்​திக்​கிற நெருக்​கடிகள், இழப்​பு​கள், அவம​திப்​பு​கள், ஏக்​கங்​கள், இருத்​தல் சார்ந்த துயரங்​கள் ஆகிய​வை​தான் இந்த நாவலின் மையப்​பொருள்​கள். இவ்​வித உணர்​வுப்​பாடு​கள், படிப்​பறிவற்ற பெற்​றோர், பற்​று​தலற்ற உறவுக்​காரர்​கள், பேப்​பர் வாங்​கும் பயனாளி​கள், உடன் பயின்ற பெண் பிள்​ளை​கள், மனதிற்​கு​கந்த சிநேகி​தி​யர், உடன் பிற​வாச் சகோ​தரியர், பணி வாய்ப்பை நல்​கிய முகவர்​கள் என அனைத்​துத் தரப்​பினரிட​மிருந்​தும் வெகு எளி​தாக இவர்​களுக்​குக் கையளிக்​கப்​படு​கின்​றன.

அதி​காலை நேரத்​தில், அனை​வரும் ஆழ்ந்த உறக்​கத்​தில் இருக்​கும்​போது, தமது தூக்​கத்​தைக் காவு கொடுத்​து, ‘சார் பேப்​பர்’ எனச் சத்​தமிட்டு நகர்​கிற நாவலின் மைய மாந்​த​ரான சொக்​கன் ஓர் அற்​புத​மான வார்ப்​பு. ஒரு ரூபாய்க்​குப் பேப்​பர் என்​கிற விளம்​பரத்​தால் அல்​லல்​படும் அபலை​யாக​வும், பேப்​பரை வாங்​குபவர் மட்​டுமின்​றி, பேப்​பரைப் படிக்​கிற அனை​வ​ராலும் எளி​தில் அதி​காரம் செய்​யத்​தக்க ஓர் எளிய மனித​னாக​வும், “அடி ஆத்​தி, எம்​புட்​டுச் செவப்​புப் பாருங்​கடி” என்​கிற வித​மாக, எளி​தில் பிற​ரால் உரு​வக் கேலிக்கு உள்​ளாகிற உடலமைப்​புக் கொண்​ட​வ​னாக​வும் சித்​திரிக்​கப்​பட்​டிருக்​கிற சொக்​க​னின் பாத்​திர வார்ப்​பில், இந்​நாவலாசிரியர் வெற்றி பெற்​றிருக்​கிறார். நாவலின் பல அத்​தி​யா​யங்​களில் சுயசரிதைப் பதி​வின் நெடி சற்​றுத் தூக்​கலாகத் தெரி​கிறது. என்​றாலும், பேப்​பர்த் தொழில் சார்ந்த விட​யங்​கள், நிரலாகக் கோக்​கப்​பட்​டிருப்​ப​தில்​தான் இந்​நாவலின் தனித்​து​வம் அடங்​கி​யிருக்​கிறது.

சொக்​கன், செவப்​பன், மாணிக்​கம், சுந்​தரம் என வளரிளம் பருவ அவல மாந்​தர்​கள் பற்​றிய விவரணை​கள், கனி ராசா, செல்​வம் எனப் பேப்​பர் தொழிலை உயிராகக் கொண்டு வாழ்பவர்கள். பற்​றிய விவரங்​கள்; பேப்​பர் எடுக்​கும் இடமான வாடிப்​பட்டி தொடங்கி சாணாம்​பட்​டி, பாண்​டிய​ராசபுரம், சந்​தோஷபுரம், ஐ.ஓ.சி, கல்​லடிப்​பட்​டி, கிருஷ்ணாபுரம், மீனாட்​சிபுரம், தாதன்​குளம், மட்​டப்​பாறை, ராம​ராஜபுரம், கரட்​டுப்​பட்​டி, மேல்​நாச்​சிகுளம், பொம்​மன்​பட்​டி, அம்​மச்​சி​யாபுரம் எனப் பேப்​பர் போட்டு மீளும் ஊர்​கள் பற்​றிய பயண வெளிக் குறிப்​பு​கள், நான்கு வழிச் சாலைகளின் வரவால் நவீன​மாகும் காலச் சூழல் பற்​றிய பதிவு​கள் என இவற்​றையெல்​லாம் இந்​நாவல், பற்பல பகடி சார்ந்த மொழி ஆளுகை​யி​னாலும், பிரச்​சா​ரமற்ற தொனி​யி​னாலும், கழி​விரக்​கத்​தைக் கோராத தன்​மை​யி​னாலும், ஒரு கவித்​துவ பிர​தி​யாக ஆக்​கி​யுள்​ளது. அந்​த​விதத்​தில் இந்​நாவல் ஆழ்ந்​த வாசிப்​பிற்​கும்​, அதி கவனிப்​பிற்​கும்​ உகந்​த​தாக ஆகியுள்​ளது.

சார்... பேப்பர் (நாவல்)
அறிவுமணி
ஆதி பதிப்பகம்
விலை:ரூ.290
தொடர்புக்கு: 9994880005

- ஆ.பூமிச்செல்வம் , இணைப் பேராசிரியர்; தொடர்புக்கு: boomiselvam@gmail.com

SCROLL FOR NEXT