மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது தேசிய மாநாட்டில் கட்சிப் பிரதிநிதிகளின் உரையை ஐந்து மொழிகளில் கேட்கும் வகையில் அக்கட்சியின் மொழிபெயர்ப்புக் குழுவினரால் செயலி உருவாக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு, ஐ-போன் ஆகிய இரண்டு வகைக்கும் ஏற்ப செயலிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இதை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு உரையையும் தனித்தனியாக மொழிபெயர்ப்பதால் ஏற்படும் நேர விரயத் துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்க மொழி, இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உரைகள் மொழிபெயர்க்கப்பட்டன. மொழிபெயர்ப்பு செய்து பேசுபவர்களுக்கு உதவும் வகையிலும் மொழிபெயர்ப்புச் சுமையைக்குறைக்கவும் மட்டுமே செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இருக்கி றார்கள்.
ஒவ்வொருவரின் உரையும் மொழி பெயர்ப்பாளர்களுக்கு முன் உள்ள திரையில் ஆங்கிலத்திலும், அவரவர் தாய்மொழியிலும் ஒளிரும். மொழி பெயர்ப்பாளர்கள் பேசுவதை மற்றவர்கள் அவரவர் செல்போனில் ஹியர் போன் மூலம் உடனடியாகக் கேட்கலாம்.
மாநாட்டு அரங்குக்குள்ளே மட்டுமே செயல்படும் வகையில் (உள் இணைய - Intranet) இதை வடிவமைத்திருக்கிறார்கள். இந்தச் செயலியைப் பயன்படுத்தும்போது இணையம் செயல்படாது என்பதால் விவா தத்தின் ரகசியம் காக்கப்படும். எதையும் அறிந்துகொள்ள மொழி தடையல்ல என்பதைத் தொழில்நுட்ப உதவியோடு உணர்த்தியிருக்கிறார்கள்.