அருஞ்செய்திகளின் தொகுப்பு | நூல் வெளி

By செய்திப்பிரிவு

​பார​தி​யாரின் முதல் பாடல் (தனிமை இரக்​கம்) மதுரையி​லிருந்து வெளிவந்த ‘விவேக பானு’ இதழில்​தான் வெளிவந்​தது. வ.ரா.​வின் முதல் மொழிபெயர்ப்​பும் மதுரையி​லிருந்து வெளிவந்த ‘ஞான​பானு’​வில்​தான் வெளி​யானது.

இப்​படிப்​பட்ட தகவல்​கள் மதுரையி​லிருந்து வெளி​யான இதழ்​களின் இலக்​கிய முக்​கி​யத்​து​வத்​தை​யும் எண்​ணிக்​கைப் பெருக்​கத்​தை​யும் காட்​டு​கின்​றன. இதழ்​கள் மட்​டுமல்ல; புத்​தகக்​கடைகளும் மதுரை​யில் மிகு​தி​யாக இயங்​கி​யுள்​ளன. காலை​யில் கறிக்​கடை​யாக​வும் மாலை​யில் புத்​தகக் கடை​யாக​வும் ஒரே கடை இரு வேடங்​களைப் புனைந்​துள்​ளது. இதை நடத்​தி​யதும் ஒரு​வரே.

‘ஸ்​லாட்​டர் ஹவுஸ் அண்ட் புக் ஹவுஸ்’ என்ற பெயரில் அது புகழும்​பெற்​றுள்​ளது. புத்​தகங்​கள் மட்​டுமல்ல அகரா​தி​களும் அதி​கம் உரு​வாகி​யுள்​ளன. ‘மதுரைப் பேரக​ரா​தி’, (1937), ‘சித்த மருத்​துவ அகரா​தி’ (இ.​ராம.குரு​சாமி கோனார், சதாசிவம் பிள்ளை ஆகியோர் தயாரித்​தது) ஆகிய​வை​யும் மதுரை​யில்​தான் உரு​வாகி​யிருக்​கின்​றன.

நாராயண ஐயங்​கார் என்​பவர், தான் பதிப்​பித்த எல்லா நூற்​பெயர்​களுக்கு முன்​னும் ஸ்ரீ என்ற முன்​னொட்​டைத் தரு​வதை வழக்​க​மாகக் கொண்​டிருந்​தார் என்ற செய்தி திகைப்​பளிக்​கிறது. மதுரை​யில் பெண்​களுக்​குத் தனிப்​பள்​ளியைத் தொடங்​கிய​போது அதற்கு எதிர்​வினை​யும் வந்​தது.

‘அடுத்து மாடு​களுக்​கும் கல்​விப் புகட்​டு​வார்​கள்’ என்​பது அந்த ஏளனம் (அவற்​றால் படிக்க இயலும் என்​றால் அதை​யும் தான் நாம் செய்ய வேண்​டும்). மீனாட்சி அம்​மன் கோயி​லின் நான்கு வாயில்​களி​லும் பள்​ளி​கள் தொடங்​கப்​பட்​டன. ‘கேட் ஸ்கூல்’ என்று அந்​தப் பள்​ளி​கள் அழைக்​கப்​பட்​டன.

இப்​படி​யான பல அருஞ்​செய்​தி​கள் ‘மதுரைப் பதிப்பு வரலாறு’ என்​கிற பொ.​ராஜா எழு​திய நூலில் கிடைக்​கின்​றன. வழக்​க​மாகக் கல்வி வரலாறோ வேறு துறை வரலாறோ எழுதுகிறவர்​கள் தமிழ்​நாட்​டின் தலைநக​ரான சென்​னையை மையமிட்டே ஆதா​ரங்​களைத் திரட்​டு​வார்​கள். பலவகை​யிலும் சென்​னையே கேந்​திர ஸ்தான​மாக இருக்​கும். அதற்​குக் காரணங்​கள் இல்​லாமல் இல்லை.

ஆவணக் காப்​பகம், கன்​னி​மாரா நூல​கம், மறைமலை நூல​கம், இப்​பொழுது ரோஜா முத்​தையா நூலகம் போன்ற ஆதார வளங்​கள் சென்​னை​யில் செயல்​பட்டு வந்​தன/வரு​கின்​றன. யதார்த்​தத்​தில் திருநெல்​வேலி, கோயம்​புத்​தூர், புதுக்​கோட்​டை, மதுரை, திருச்​சி​ராப்​பள்ளி போன்ற இடங்​களி​லும் வரலாற்​றுக்கு ஆதா​ரங்​கள் கிடைக்​கின்​றன.

கிறிஸ்​து​வம் முதலில் திருநெல்​வேலி​யில்​தான் காலூன்​றிப் பரவியது; ஒப்​பிடு​கை​யில் சுதந்​திர சமஸ்​தான​மாகப் புதுக்​கோட்டை விளங்​கியது; மதுரை​யில் சங்​கங்​கள் தோன்​றித் தமிழ் வளர்த்​தன. இவை வட்​டாரப் பகு​தி​களி​லும் ஆய்​வுக்​குரிய ஆவணங்​கள் கிடைக்​கும் என்​ப​தைக் காட்​டு​கின்​றன.

ஆனால், வட்​டாரங்​களைப் பற்​றிய ஆராய்ச்​சிகள் பெரும்​பாலும் முன்​னெடுக்​கப்​படு​வ​தில்​லை. முழு​மையை விரும்​பும் ஆய்​வாளர்​கள், பிண்​டத்​தின் நிலையை ஆய்​வதைத் திரஸ்​கரித்தே வந்​துள்​ளனர். அதற்கு மாற்​றான முன்​னெடுப்பு இந்த ‘மதுரைப் பதிப்பு வரலாறு’ நூல், சுவைபட அமைந்​திருக்​கிறது.

அதனால் இந்​நூல் முனை​வர் பட்​டத்​திற்​காக எழுதப்​பட்ட ஆய்​வு​தானா என்​கிற சந்​தேகத்​தைத் தரு​கிறது. இந்​தி​யர்​கள் அச்​சகம் வைத்​துக் கொள்​ளலாம் என்​கிற உரிமை 1835இல்​தான் கிடைத்​தது. ஆகவே அதிலிருந்து இந்​தியா குடியர​சான 1950 வரையி​லான காலப்​பகு​தியை இந்த ஆய்​வாளர் ஆய்​வுக்​குரிய கால​மாக எடுத்​துக் கொண்​டுள்​ளார். அப்​பகு​தியி​லான அச்​சுப் பண்​பாட்டு அசைவு​களை விரி​வாகப் பதிவுசெய்​துள்​ளார்.

பேராசிரியர் பில்​லியோசா தனது மதிப்​புரை​யில் ‘மதுரைப் பேரக​ராதி ‘பறை’ என்​கிற சொல்​லுக்​குத் தந்​திருக்​கும் ‘விரும்​பிய பொருள்’ என்ற பொருள் சென்​னைப் பல்​கலைக்​கழக அகரா​தி​யில் இல்​லை’ என்று கூறி​யிருக்​கிறார். அந்​தப் பொருள் திருப்​பாவை​யில் (பாடல் 28) வரும் ‘பறை’ என்​ப​தற்​குப் பொருத்​த​மாக உள்​ளது என்​றும் சுட்​டி​யிருக்​கிறார். இந்​தத் தகவலை நூலாசிரியர் மேற்​கோளாகக் காட்​டு​கிறார். ஆனால், சென்​னைப் பல்​கலைக்​கழக அகரா​தி​யிலும், மு.சண்​முகம் பிள்ளை அகரா​தி​யிலும் ‘விரும்​பிய பொருள்’ என்ற பொருள் தரப்​பட்​டுள்​ளது.

சிவனே சொன்​னாலும் ஒரு தடவை சிரமத்​தைப் பார்க்​காமல் சரி பார்த்​து​விடு​வது நல்​லது. அது​வும் ‘மதுரை மரபு’​தான்! ‘சூரிய நாராயண சாஸ்​திரி​யார், கலா​வதி நூலை ராம​நாத​புரம் பாஸ்கர சேதுப​திக்கு உரிமை ஆக்​கி​னார்’ என்று ஒரு குறிப்பை ஆய்​வாளர் எழு​தி​யிருக்​கிறார்.

இந்த உரிமை உரை என்ற சொற்​றொடருக்​குக் காணிக்​கை, அர்ப்​பணம் ( Dedication) என்​பனவே பொருள். மற்​றபடி அந்த நூலின் பதிப்​புரிமை நூலாசிரியரிடமே இருக்​கும். அச்​சுப்​பிழைகள் இல்​லாத நூல் இந்​தக் காலத்​தில் ஒரு நூலா? இத்​தகைய வட்​டார வளங்​களைத் தொகுக்​கும் முயற்​சிகள் தமிழ்​நாடு முழு​வதும் மேற்​கொள்​ளப்பட வேண்​டும். மதுரை வாசகர்​கள் மட்​டும் வாங்​கி​னால்​ கூட போதும்​. பொன்​னை​யா ராஜா பதிப்பித்த பிர​தி​கள்​ அனைத்​தும்​ விற்​று விடும்​. செய்வார்களா?

மதுரை பதிப்பு வரலாறு (1835-1950)
பொ.ராஜா
நீலம் பதிப்பகம்
விலை: ரூ.350
தொடர்புக்கு: 6369825175

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

மேலும்