நாங்குநேரியில் கடந்த ஆண்டு பட்டியல் சாதி மாணவர் சின்னதுரையை ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவர்கள், வீடுபுகுந்து அரிவாளால் வெட்டியதோடு, தடுக்க வந்த சின்னதுரையின் தங்கையையும் தாக்கியது, பள்ளி மாணவர்களுக்குள்ளும் சாதி வெறி வேரூன்றிவிட்டதை உணர்த்தியது.
இந்தக் கொடுஞ்செயலின் பின்னணியில் மாணவர்களிடையே நிலவும் சாதி வேற்றுமை உணர்வுகளைக் களைவதற்கும் மாணவர்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் ஆசிரியர்களும் கல்விப்புல ஆளுமைகளும் வழங்கிய ஆலோசனைகள் இந்த நூலில் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன. மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார் இந்த நூலின் தொகுப்பாசிரியர். அவரது ‘மணற்கேணி’ ஆய்விதழ் சார்பாக வழங்கப்படும் நிகரி சமத்துவ ஆசிரியர் விருதுபெற்ற சாந்தி, பேராசிரியர் இரா.அழகராசன் உள்ளிட்டோர் விருது விழாவில் வாசித்த ஏற்புரையின் கட்டுரை வடிவம் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்