இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமை அண்ணா. மாநில அரசின் அதிகாரங்களுக்காகக் குரல் கொடுத்தவர் என்பதைத் தாண்டியும் அண்ணாவின் பங்களிப்பு விரிவுகொண்டது. திராவிட இயக்கச் செயற்பாட்டாளராக அண்ணா, தமிழ்நாட்டுக்குச் செய்த சீர்திருத்தங்கள் முக்கியமானவை. அந்த ஆளுமையை முழுமையாக அறிந்துகொள்ளும் பொருட்டு இந்து தமிழ் திசை பதிப்பகம் வெளியிட்ட ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது.
தமிழ்நாடு பாடநூல் வெளியீட்டுக் கழகத் திட்டத்தில் வெளியிடப்பட்ட மொழிபெயர்ப்பு நூலாகும். இந்த நூலின் முதல் பகுதியில் பெரியார், அண்ணாவின் மறைவு தமிழகத்துக்கு எப்படியான இழப்பு என்பதைக் குறித்து எழுதியிருக்கிறார். இந்தப் பகுதியில் முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெ.ஜெயலலிதா ஆகியோர் அண்ணா பற்றி எழுதியிருக்கின்றனர். இந்தப் பகுதியின் மூலம் தமிழக அரசியலில் அண்ணா விளைவித்த தாக்கம் பற்றி அறிந்துகொள்ள முடியும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்