நம் வெளியீடு: அண்ணாவின் வழி தமிழக அரசியல்!

By செய்திப்பிரிவு

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமை அண்ணா. மாநில அரசின் அதிகாரங்களுக்​காகக் குரல் கொடுத்தவர் என்பதைத் தாண்டியும் அண்ணாவின் பங்களிப்பு விரிவு​கொண்டது. திராவிட இயக்கச் செயற்​பாட்​டாளராக அண்ணா, தமிழ்​நாட்டுக்குச் செய்த சீர்திருத்​தங்கள் முக்கிய​மானவை. அந்த ஆளுமையை முழுமையாக அறிந்​து​கொள்ளும் பொருட்டு இந்து தமிழ் திசை பதிப்பகம் வெளியிட்ட ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது.

தமிழ்நாடு பாடநூல் வெளியீட்டுக் கழகத் திட்டத்தில் வெளியிடப்பட்ட மொழிபெயர்ப்பு நூலாகும். இந்த நூலின் முதல் பகுதியில் பெரியார், அண்ணாவின் மறைவு தமிழகத்​துக்கு எப்படியான இழப்பு என்பதைக் குறித்து எழுதி​யிருக்​கிறார். இந்தப் பகுதியில் முன்னாள் முதல்​வர்கள் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெ.ஜெயலலிதா ஆகியோர் அண்ணா பற்றி எழுதி​யிருக்​கின்​றனர். இந்தப் பகுதியின் மூலம் தமிழக அரசியலில் அண்ணா விளைவித்த தாக்கம் பற்றி அறிந்​து​கொள்ள முடியும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE