கவிஞர் சக்திக்கனல் கடந்த வாரம் காலமானார். 1931இல் பிறந்த சக்திக்கனல், தனது நெடிய வாழ்வில் பரவலான இலக்கிய, பண்பாட்டு ஈடுபாடுகளைக் கொண்டிருந்தாலும் தமிழ்நாட்டின் தனிப்பெரும் நாட்டார் காப்பியமான அண்ணன்மார் கதையின் எழுத்து வடிவத்தை உருவாக்கியவர் என்கிற முறையில் மிகுந்த கவனம் பெற்றவர். ‘அண்ணன்மார் சுவாமி கதை’ புத்தகம் 1971இல் வெளிவந்தது. தமிழில் வெளியான ஒரே நாட்டார் காப்பியம் அண்ணன்மார் கதை.
சக்திக்கனல் ‘அண்ணன்மார் சுவாமி கதை’யை 1971இல் வெளியிடுவதற்கு முன்பே 1965இல் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர் பிரெண்டா பெக் அக்கதையின் வாய்மொழி வடிவத்தைச் சேகரித்திருந்தார். அமெரிக்காவிலிருந்து இங்கு வந்து தாராபுரத்தை அடுத்த ஓலப்பாளையம் என்னும் கிராமத்தில் தங்கி, எரிசனம்பாளையம் ராமசாமி என்பவர் பாடிய கதையைப் பதிவுசெய்திருந்தார். ஆனால், அதன் உரைநடை வடிவம் 1992இல்தான் வெளிவந்தது. 1971இல் வெளிவந்த சக்திக்கனலின் புத்தகம் கொங்குப் பகுதியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்