புதிய தடத்தில் பயணிக்க வைத்தவர்

By அ.மோகனா

பேராசிரியர் வீ.அரசுவின் 70ஆம் ஆண்டு அகவை நிறைவினையாட்டி வெளிவந்திருக்கிறது ‘ஓர்மைத்தடம் பேரா.வீ.அரசு: ஆசிரியம் - ஆய்வு -உரையாடல்கள்’ என்ற நூல். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் இருந்து, தர்க்க அடிப்படையிலான சுயசிந்தனையை வளர்க்கின்ற பாடத்திட்டங்களை வடிவமைப்பதில் தொடங்கித் தன்னைப் போலவே தன் மாணவர்களையும் நெறிப்படுத்திக் கரடுதட்டிப்போயிருந்த தமிழ்க் கல்விச் சூழலில் ஒரு பாரிய மடைமாற்றத்தை ஏற்படுத்தியவர் வீ.அரசு.

ஆசிரியர் – மாணவர்களுக்கிடையிலான உறவு நீர்த்துப்போயுள்ள தற்காலச் சூழலில் பணிஓய்வு பெற்றுப் பத்தாண்டுகள் கடந்த நிலையிலும் தம் மாணவர்களால் கொண்டாடப்படுகின்ற ஆளுமையாக அரசு இருப்பதற்கு, அவருடைய வகுப்பறைச் செயற்பாடுகளும் கற்பித்தல் முறைகளுமே பின்புலமாக இருக்கின்றன. கல்விச்சூழலிலும் பொது வாழ்விலும் அவர் கடந்துவந்த பாதையினை அவருடைய மொழியிலேயே உணர்வுபூர்வமாகப் பதிவுசெய்துள்ளது இந்த நூல்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE