பாலகுமார் விஜயராமனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. ‘ஒருவன் எதைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறானோ, அதில் சொதப்ப வைப்பதுதான் விதியின் விளையாட்டு’ என நம்பும் எளிய மனிதர்களான ஆம்புலன்ஸ் ஓட்டுநர், புலம்பெயர் தொழிலாளர்கள், ஹோட்டல் சிப்பந்தி, இயந்திரங்களை இயக்கும் தொழிலாளி, குழந்தையைக் காக்க வாழ்வைப் பணயம் வைக்கும் எளிய தகப்பன், ஏக்கத்தை வாழ்வாகக் கொண்ட பெண்கள், நவீன வாழ்வில் தன்னைத் தொலைக்கும் பெண்கள், நிச்சயமற்ற வேலையில் வாழ்வைத் தொலைப்பவர்கள் எனச் சமகால சமூகத்தின் வாழ்க்கை சார்ந்த மனோபோக்குகளைக் கதைக்களமாக வைத்துள்ளார்.
ஆதிக்க மனப்போக்கைக் கொடிய விலங்குகளாகச் சித்தரித்து, அந்த விலங்கின் பெயர் ஆண் என முடிப்பதில் இருக்கும் உத்தி, எதையாவது செய்து வைரலாக்கித் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டிருப்பதில் இருக்கும் நோய்க்கூறுகளைக் கதையாக்குவதில் இருக்கும் அனுபவம், தன் வளர்ப்புப் பறவையின் குஞ்சு பிழைத்தால் தன் குழந்தையும் பிழைக்கும் எனும் நம்பிக்கை கொண்டவனின் குழந்தையை அறிவியல் காப்பாற்றுவதில் இருக்கும் முரண் ஆகிய நுட்பங்கள் கவனிக்கத்தக்கவை. நஞ்சு மனிதர்களால் விதைக்கப்பட்டுச் செடியாக வளர்ந்து, மனித மனங்களுள் ஊடுருவிப் பெரும் மரமாக நின்று வாழ்வைச் சிதைக்கிறது என்பதன் காட்சிப்படுத்தலே ‘நஞ்சுக் கொடி’ தொகுப்பின் கதைகள். - ந.பெரியசாமி
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்