பூவிதழ் உமேஷின் ‘எழுத்தெனப்படுவது’ நூல் புதிய நோக்கில் இலக்கணத்தை நயம்படச் சொல்கிறது. எதுவொன்றையும் பிழையற்று உள்வாங்கும்போதுதான் அதன் உள்ளார்ந்த முழுமையை உணர முடியும். உச்சரிப்பிலும் உரைநடைகளிலும் மொழிப் பிழைகள் பெருத்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், பிழையறப் பேசவும் எழுதவும் வேண்டியிருப்பதன் அவசியத்தைக் கூற ‘மயங்கொலிகள்’, ‘வல்லினம் மிகும் இடங்கள்’ ஆகிய இரு பகுதிகளைக் கொண்டு மொழியைக் கையாளும்போது உண்டாகிற பிழைப் பிணியைக் களைந்தெறிகிற மருந்தாக வந்துள்ளது இந்நூல்.
மயங்கொலி எழுத்துகளான ண, ன, ந, ல, ழ, ள, ர, ற ஆகியன சொற்களில் எப்படி இயைந்து வருகின்றன என்பதை எடுத்துரைக்கும் விதம் எளிமையாகவும் வாசிப்பவர்களுக்கு ஆர்வத்தை உருவாக்குகிற நேர்த்தியோடும் வந்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்