இரண்டாயிரத்து இருபதுக்குப் பிறகு நம்பிக்கை அளிக்கும் பல இளம் கதைஞர்கள் தமிழில் உருவாகியிருக்கிறார்கள். இவர்கள் அதற்கு முந்தைய பத்தாண்டுகளின் இறுதியில் எழுத வந்தவர்கள். இணைய இதழ்களில்தான் இவர்களது பெரும்பாலான கதைகள் வெளியாகியிருக்கின்றன. தமிழ்ப் புனைகதைக்கு வளம் சேர்க்கும் பல புனைவுகள் இவர்களின் வழியாக உருப்பெற்றிருக்கின்றன. அந்த வகையில் கவிதையிலிருந்து புனைகதைக்கு நகர்ந்துள்ள முத்துராசா குமாரின் ‘ஈத்து’ குறிப்பிடத்தக்க தொகுப்பு. நிலத்துக்கும் மனிதனுக்குமான இருப்பை இவர் வெவ்வேறு புனைவுகளாக எழுதியுள்ளார்.
இயற்கையிலிருந்து தங்களைத் துண்டித்துக்கொள்ளாத மனிதர்கள் இவரது கதைகளில் நடமாடுகிறார்கள். நவீன வளர்ச்சி இம்மனிதர்களின் வாழ்க்கை மீது நிகழ்த்தும் இடையீட்டைத் ‘தொல்லிருள்’ என்ற கதையில் எழுதியிருக்கிறார். இக்கதையில், மின்சாரம் நவீனத்துவத்தின் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிலத்தின் மீது மனிதர்களுக்குள்ள அவ்வளவு உரிமைகளும் புழு பூச்சிகளுக்கும் உண்டு என்பது இவரது பார்வை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்