நூல் வெளி: ஒரு பகுத்தறிவுக் கதை

By ச.தமிழ்ச்செல்வன்

சரோஜா பிரகாஷின் நெடுங்கதையான ‘கொச்சைக் கிடா’ ஒரு வித்தியாசமான பரப்பில் பயணம் செய்கிறது. ஆனால், பேசப்படும் உள்ளடக்கம் நம் சமூகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஆணாதிக்கம், சாதி ஆணவம், மூடநம்பிக்கைகள் போன்றவைதாம். எழுத்தாளர் அம்பை ‘காட்டில் ஒரு மான்’ கதையில் வயதுக்கு வராத ஒரு பெண் வாழப் போராடுவதை நுட்பமாகச் சொல்லியிருப்பார். அது நடுத்தர வர்க்க வாழ்க்கைப் பின்புலம். இங்கு சரோஜா பிரகாஷ் தொட்டிருப்பது முற்றிலும் கிராமம் சார்ந்த வாழ்க்கைப் பின்னணி. தானே பெற்ற பெண் குழந்தையின் வலிகளைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல், ஊருக்குள் தான் ஒரு ஆண் மகன் என்று வீராப்பாகக் காட்டிக்கொள்வதே முக்கியம் என்றும் மகள் வயதுக்கு வந்தே ஆக வேண்டும் என்பதற்காகவும் யாரோ மூடர்கள் சொன்னதைக் கேட்டு, பச்சைத் தவளையை மகளுக்குக் கொடுத்துச் சாப்பிட வைக்கிறான். நினைத்துப் பார்க்க முடியாத அருவருப்பான தண்டனை அது. தவளையைச் சாப்பிடச் சாப்பிட மகளுக்கு வாந்தி பேதி ஆகிச் செத்தே போகிறாள். காலராவினால் அவள் செத்துப்போனதாகக் கதை கட்டிவிடுகிறார்கள். ஒருவகையில் இதுவும் ஓர் ஆணவக் கொலைதான்; ஆணாதிக்க ஆணவக் கொலை. செய்த கொலை உண்டாக்கிய குற்ற உணர்வைப் போக்கிக்கொள்ளப் பரிகாரம் தேடுவதில் கதை தொடங்குகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE