அமெரிக்கத் தமிழர்களின் விளக்கு இலக்கிய அமைப்பின் 27ஆம் ஆண்டுக்கான எழுத்தாளர் புதுமைப்பித்தன் நினைவு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வறிஞர் பொ.வேல்சாமிக்கும் எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்விக்கும் 2022க்கான விருது வழங்கப்படவுள்ளது. கட்டுரை, விமர்சனம், ஆய்வு, பதிப்பு, உரையாடல் எனத் தொடர்ந்து இயங்கிவருபவர் பொ.வேல்சாமி. ‘பொற்காலங்களும் இருண்ட காலங்களும்’, ‘கோவில் நிலம் சாதி’, ‘வரலாறு என்ற கற்பிதம்’ போன்ற நூல்களின் ஆசிரியர்.
தமிழில் கவனம் பெற்ற யதார்த்தவாத எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வி. அடித்தட்டு மக்களின் பாடுகள்தாம் இவரது எழுத்தின் பாடுபொருள். கதைகள் வழி நிலம், பண்பாடு ஆகிய அம்சங்களைச் சொல்வதில் விற்பன்னர். அதனால், தமிழின் ‘சிறந்த மானுடவியல் எழுத்தாளர்’ என்கிற அடையாளமும் பெற்றவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்