வள்ளுவர் வகுத்த அறத்தை முழுமையாக வாழ முயன்றவர் காந்தியடிகள். தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனாரும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கமும் வள்ளுவத்தின்படி வாழ்ந்த மகான் என்று காந்தியைப் பல இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார்கள். ‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ என்கிற ஓர் அருமையான நூலை திரு.வி.க. எழுதியுள்ளார். அதேபோல் நாமக்கல் கவிஞரும் ‘காந்தியக் கவிஞர்’ என்று அறியப்பட்டவர். அசலாம்பிகை அம்மையார் ‘காந்தி புராணம்’ என்ற நூலை எழுதியுள்ளார்.
காந்தியடிகள் 20 முறை தமிழ்நாட்டுக்கு (1896 - 1946 இடைப்பட்ட காலத்தில்) வருகை தந்துள்ளார். அதைப் பற்றிய விரிவான தகவல்கள் அடங்கியுள்ள நூல் தற்போது அமரர் அ.இராமசாமி நூற்றாண்டு நினைவுப் பதிப்பாக வெளிவந்துள்ளது. 35 தலைப்புகள், 926 பக்கங்கள், தமிழ்நாட்டு வருகையுடன் தொடர்புடைய பல அரிய புகைப்படங்கள் கொண்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்