நூல் வெளி: சமூகத்தை மாற்றிய துணைவேந்தரின் கதை

By எஸ்.சுஜாதா

‘நம் உலகில் நம்மோடு வாழ்பவர்கள்தாம் என்றாலும் பழங்குடிச் சமூகங்கள் குறித்து நமக்குக் குறைந்தபட்ச அறிமுகம்கூட இல்லை’ என்கிறார் பல்துறை ஆய்வாளர் கணேஷ் தேவி. காடுகளில் வாழும் பழங்குடிகளைப் பற்றி நமக்குச் சரியான புரிதல் இல்லை. அப்படி ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் தேஜஸ்வி வி.கட்டிமனி. கர்நாடகத்தில் பிறந்து, இந்தி மொழிப் பேராசிரியரானவர். மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், கல்வி சார்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 2014ஆம் ஆண்டு இந்திரா காந்தி தேசியப் பழங்குடி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டவர்.

ஒரு சிறந்த மனிதருக்குத் தகுதியான பொறுப்பு அளிக்கப்படும்போது, அவரால் சமூகமே அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் என்பதற்கு வாழும் உதாரணமாகத் திகழ்கிறார் கட்டிமனி. தற்போது ஆந்திரத்தின் மத்தியப் பழங்குடிப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இருக்கும் இவர், மத்தியப் பிரதேசத்தின் அமரகண்டக இந்திரா காந்தி தேசியப் பழங்குடிப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றிய அனுபவங்களை, ‘பழங்குடி துணைவேந்தரின் போராட்டங்கள்’ என்கிற பெயரில் நூலாக எழுதியிருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE