தஞ்சாவூரின் வரலாறு அரசர்களால் மட்டும் ஆனதல்ல; அதில் நம்மைப் போன்ற சாமானியர்களும் வாழ்ந்துள்ளனர். இருப்பினும், தஞ்சாவூர் குறித்து எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் பலவும் அரசர்களின் மீது மட்டுமே பெருவிருப்பம் கொண்டவையாக இருக்கின்றன. அன்றைய காலகட்டத்தில் சாமானியர்கள் எப்படி வாழ்ந்தார்கள், எங்கே வசித்தார்கள், வசிப்பிடம் எப்படி இருந்தது, என்ன சாப்பிட்டார்கள், என்ன உடை அணிந்தார்கள் என்பது போன்ற தகவல்கள் பூதக்கண்ணாடி கொண்டு தேடினாலும் நமக்குக் கிடைப்பதில்லை.
இந்தச் சூழலில், சாமானியர்களின் வாழ்விடமாக விளங்கிய / விளங்கும் தஞ்சாவூர் சந்துகளின் வரலாறு குறித்து இந்நூலில் தஞ்சாவூர்க் கவிராயர் எழுதியிருக்கிறார். நூலாசிரியர் தனது இளமைக் காலத்தில் தஞ்சாவூரின் சந்துகளில் அதிகம் புழங்கியவர். இதன் காரணமாக, தஞ்சாவூரின் சந்துகள் இந்நூலில் மிகுந்த உயிரோட்டத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. - உசேன்
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்