கிரிக்கெட் மைதானம் போல அலங்காநல்லூரில் பிரம்மாண்டமாக தயாராகும் ஜல்லிக்கட்டு மைதானம்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் உலகத் தரத்தில் கிரிக்கெட் மைதானம்போல ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் போற்றும் பொங்கல் பண்டி கையை முன்னிட்டு நடக்கும் வீர விளை யாட்டான ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றது.

பொங்கலை முன்னிட்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண மாநிலம் முழுவதும் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணி களும் திரள்வர்.

ஆனால், போட்டிகள் நடக்கும் இடம் மிகவும் குறுகலாக உள்ளதால் போதிய இடவசதியின்றி பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டை பார்வையிட முடியாமல் ஏமாற்றத் துடன் திரும்புவர். குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டை காண முந்தைய நாள் இரவே சென்றாலும் பார்க்க இடம் கிடைப்பதில்லை.

வாடிவாசல் அருகேயுள்ள பிரதான காலரியை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், முக்கிய பிரமுகர்களும், அவர்களது உறவினர்களும் ஆக்கிரமித்துக் கொள்வதால் பொதுமக்கள் பார்வையிட வழியில்லாமல் போய்விடும். இதையடுத்து, ஜல்லிக்கட்டை அனைத்து தரப்பினரும் கண்டுகளிக்க ஏதுவாக, அலங்காநல்லூர் அருகே கீழக் கரை கிராமத்தில் 66 ஏக்கரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடல் அமைக் கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

மற்றொரு நாளில்.. அதன்படி ரூ.44 கோடி செலவில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்வையிடும் வகையில், உலகத் தரத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இங்கு போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அலங்காநல்லூரில் பாரம்பரிய முறைப் படி பொங்கல் பண்டிகை நாளில் ஜல்லிக் கட்டு நடந்தாலும், மற்றொரு நாளில் கீழக்கரையில் தற்போது கட்டப்படும் இந்த மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இங்கு வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்கள் பரிசோத னைக்கூடம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், வீரர்கள் உடை மாற்றும் அறை, தற்காலிக விற்பனைக் கூடங்கள், பொருள் பாதுகாப்பு அறை, தங்கும் அறை ஆகியவை அமைய இருக்கிறது. நுழைவு வாயில் வளைவு, காளைகள் சிற்பக் கூடம், உட்புறச் சாலைகள், மழைநீர் வடிகால் வசதி, செயற்கை நீரூற்று, புல் தரைகள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆகியவை அமைக்கப்படுகின்றன.

அலங்காநல்லூரில் இருந்து இந்த மைதானத்துக்கு பார்வையாளர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் ரூ.22 கோடியில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிய சாலைகளும் அமைக்கப்பட உள்ளன. இந்த மைதானத்தில் ஜல்லிக்கட்டு மட்டு மில்லாது, பண்பாடு மற்றும் கலாச்சார விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், கால் நடை சந்தை ஆகியவையும் நடத்தப்படும் என்றும், அதன்மூலம் ஈட்டப்படும் வருவாய் மைதான பராமரிப்புக்கு செலவிட நட வடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும் இந்த மைதானத்தை சுற்றுலாத் துறை மூலம் பண்பாட்டு வளாகமாக மேம்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது. மைதானம் கட்டி முடிக்கப்பட்டதும், விளையாட்டு மைதானங்களை நிர்வகிப் பதில் அனுபவம் பெற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் இந்த ஜல்லிக்கட்டு மைதானம் ஒப்படைக்கப் படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE