கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு முதல் கேரள பெண் மருத்துவர் கொலை வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மே 10, 2023

By செய்திப்பிரிவு

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: 5 மணி வரை 65.69% வாக்குப்பதிவு: கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. கடைசியாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.மாலை 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குப்பதியிருந்தன. காலையிலிருந்தே பிரபங்களும், அரசியல் தலைவர்களும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

கர்நாடகாவில் இந்தமுறை பாஜக, காங்., மஜத இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224 தொகுதிகளிலும், எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 217 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளிலும் களமிறங்கியுள்ளன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2,613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்ற‌னர். வாக்கு எண்ணிக்கை மே 13 தேதி நடைபெற இருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE