ரோதாஸ்: பிஹாரின் ரோதாஸ் மாவட்டத்தில் உள்ளது மொரதாபாத் கிராமம். இங்குள்ள சாக்கடையில் நேற்று முன்தினம் காலை ஒரு பை கிடந்தது. அதில் ரூ.2,000, ரூ.500, ரூ.100, ரூ.10 கட்டுகள் இருந்தன. இத்தகவல் பரவியதும் மொரதாபாத் கிராம மக்கள் சாக்கடையில் இறங்கி பண கட்டுகளை அள்ளிச் சென்றனர். இந்த பணம் அனைத்தும் உண்மையானவை என கிராம மக்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். பையில் இருந்தது கள்ள நோட்டுக்களா? இல்லையா, அதை போட்டது யார் என மாவட்ட நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது சந்தையில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில் சாக்கடையில் பணப் பை வீசப்பட்டதால், சந்தையில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.