டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் குற்றப்பின்னணி கொண்டவர்கள் அதிக அளவில் நிலம் வாங்குவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
மேலும் உத்தராகண்ட் மாநிலத்தில் லவ் ஜிஹாத் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கிரிமினல் குற்றவாளிகள் நிலம் வாங்குவதைத் தடுக்க அவசர சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.