மதுரை சித்திரைத் திருவிழாவில் 4 பக்தர்கள் உயிரிழப்பு: கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் பரவசத்துடன் முழங்க பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் வெள்ளிக்கிழமை அதிகாலை இறங்கினார். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர். இந்த சித்திரைத் திருவிழாவின்போது, வைகை ஆற்றில் மூழ்கி 3 பக்தர்களும் உயிரிழந்தனர். இதனிடையே, தண்ணீர் பீய்ச்சிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
பலத்த பாதுகாப்புக்கு இடையிலும் இளைஞர்கள், பெண்கள் என பக்தர்கள் முண்டியடித்து சுவாமியை பார்த்தனர். ஆழ்வார்புரம் பகுதியே பக்தர்கள் கூட்டத்தால் திணறியது. இருப்பினும், உற்சாக மிகுதியில் யானைக்கல் தரைப்பாலம் அருகிலுள்ள தடுப்பணையில் தேங்கிய தண்ணீரில் பக்தர்கள் சிலர் குதித்து விளையாடினர். இந்நிலையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கிய பின், தடுப்பாணை பகுதியில் ஆண் உடல் ஒன்று மிதந்தது தெரியவந்தது. போலீஸார் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்