புதுடெல்லி: எல்லை வரையறை தொடர்பாக அமைக்கப்பட்ட முத்தரப்பு குழு, அசாமின் சில பகுதிகளை அருணாச்சல பிரதேசத்துடன் இணைக்க பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து அசாம் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இதனிடையே, இரு மாநிலஅரசுகளும் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் ஒப்பந்தத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் அருணாச்சல் முதல்வர் பெமா காண்டுவும் நேற்று கையெழுத்திட்டனர். மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.