பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கோவிட் தொற்று உறுதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் இந்திய விமானப் படை கமாண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராஜ்நாத் சிங் செல்லவிருந்த நிலையில், அவருக்கு தொற்று உறுதியானது. இதனால் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ரத்தானது.

அவரை பரிசோதித்த மருத்துவக் குழுவானது அவர் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியது. அதனையடுத்து தற்போது அமைச்சர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு லேசான அறிகுறிகளே ஏற்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

12,591 பேருக்கு கோவிட் தொற்று:

XBB.1.16: இந்தியாவில் தற்போது XBB.1.16 என்ற ஓமிக்ரான் புதிய திரிபு தான் கோவிட் பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக உள்ளது. XBB வைரஸ் என்பது ஒமிக்ரானின் பிறழ்வு வைரஸ்களில் இருந்து உருமாறிய வைரஸாகும். அதாவது பிஏ.2.10.1, பிஏ.2.75, எக்ஸ்பிஎப், பிஏ.5.2.3மற்றும் பிஏ.2.75.3 வைரஸ்களின் மறுவடிவமாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE