ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஜனகாமா போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஸ்ரீநிவாஸ் (55). இவரது மனைவி ஸ்வரூபா (50). இவர்களது 2 பிள்ளைகளும் ஹைதராபாத்தில் படிக்கின்றனர்.
நேற்று அதிகாலை ஸ்வரூபா வீட்டின் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நகர இணை போலீஸ் ஆணையர் தேவேந்தர் ரெட்டி, இன்ஸ்பெக்டர் நாகபாபு ஆகியோரும் ஸ்ரீநிவாஸுக்கு ஆறுதல் கூறினர்.
இவர்கள் அனைவரும் வீட்டில் இருக்கும்போது, “ஒரு நிமிடம், பாத்ரூம் போய் வருகிறேன்” என கூறிச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிவாஸ், கழிவறையில், தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். துப்பாக்கி ஓசை கேட்டு அனைவரும் ஓடி சென்று பார்ப்பதற்குள் அவர் ரத்த வெள்ளத்தில் கழிவறையில் விழுந்து கிடந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.