இந்தியாவில் புதிதாக 3,641 பேருக்கு கோவிட் தொற்று

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 3,641 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 20,219 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 3,641 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 20,219 ஆக உயர்ந்துள்ளது.

கோவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 75 ஆயிரத்து 135 ஆக உள்ளது. ஒரு நாளில் 1,396 பேர் குணமடைந்துள்ளனர்.

கோவிட் தொற்றால் மகாராஷ்டிராவில் 3 பேர், டெல்லி, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, கோவிட் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 892ஆக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE