டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு - சிசோடியாவின் காவல் ஏப். 5 வரை நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல்நடந்துள்ளதாகக் கூறி டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்தமாதம் விசாரணை நடத்தி கைது செய்தனர். மேலும் அவரை சிபிஐ காவலில் வைத்து மார்ச் 4-ம் தேதி வரை விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பின்னர் சிபிஐ காவல் 2-வது முறையாக மார்ச் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மார்ச் 6-ம் தேதி சிபிஐ காவல் முடிந்ததும், மணிஷ் சிசோடியாவுக்கு 20-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து திஹார் சிறையில் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், மணீஷ் சிசோடியாவிடம் டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பண மோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி விசாரணை நடத்தினர். அதற்கு 2 நாட்களுக்கு முன்பும் இதேபோன்று விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டனர்.

இதனிடையே, திஹார் சிறையில் கடந்த 9-ம் தேதி மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனிடையே, அமலாக்கத் துறையின் காவல் முடிவடைந்த நிலையில், டெல்லி ரோஸ்அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில்சிசோடியா நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிசோடியாவுக்கு ஏப்ரல் 5-ம் தேதி வரைநீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக சிபிஐ அதிகாரிகள் கோரிக்கையின்படி, சிசோடியாவின் நீதிமன்ற காவலை 14 நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 3 வரை(சிபிஐ தொடர்ந்த வழக்கு) நீட்டித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்