ஆந்திர பிரதேச சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் 2 பேர் மீது தாக்குதல்

By என்.மகேஷ்குமார்


அமராவதி: ஆந்திர மாநில பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை நேற்று காலையில் கூடியதும், பொதுக் கூட்டம், ஊர்வலம், பேரணிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து விவாதிக்க வேண்டுமென்று தெலுங்கு தேசம் கட்சியினர் சபாநாயகரிடம் முறையிட்டனர். இதற்கு சபாநாயகர் தம்மிநேனி சீதாராம் அனுமதி வழங்கவில்லை.

இதனால், தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி அங்கு அடிதடி ஏற்பட்டது. இதில் தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் பால வீராஞ்சநேய சுவாமி மற்றும் புச்சைய்ய சவுத்ரி ஆகியோர் தாக்கப்பட்டதாக அந்த கட்சியினர் சபாநாயகரிடம் முறையிட்டனர்.

ஆனால், ஆளும் கட்சியினர் மீது தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக ஜெகன் கட்சி எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் புகார் செய்தனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் மீண்டும் எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஆளும் கட்சியினர் தங்கள் கட்சி எம்எல்ஏக்களை தாக்கியதை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வன்மையாக கண்டித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

42 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்