அமராவதி: ஆந்திர மாநில பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை நேற்று காலையில் கூடியதும், பொதுக் கூட்டம், ஊர்வலம், பேரணிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து விவாதிக்க வேண்டுமென்று தெலுங்கு தேசம் கட்சியினர் சபாநாயகரிடம் முறையிட்டனர். இதற்கு சபாநாயகர் தம்மிநேனி சீதாராம் அனுமதி வழங்கவில்லை.
இதனால், தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி அங்கு அடிதடி ஏற்பட்டது. இதில் தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் பால வீராஞ்சநேய சுவாமி மற்றும் புச்சைய்ய சவுத்ரி ஆகியோர் தாக்கப்பட்டதாக அந்த கட்சியினர் சபாநாயகரிடம் முறையிட்டனர்.
ஆனால், ஆளும் கட்சியினர் மீது தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக ஜெகன் கட்சி எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் புகார் செய்தனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் மீண்டும் எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஆளும் கட்சியினர் தங்கள் கட்சி எம்எல்ஏக்களை தாக்கியதை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வன்மையாக கண்டித்துள்ளார்.
» ராகுலுக்கு எதிராக மோடி-மம்தா ஒப்பந்தம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
» 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது கடினம் - பிரசாந்த் கிஷோர் கருத்து
முக்கிய செய்திகள்
இந்தியா
21 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
42 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago