தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறது கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல். தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் அதிகப்படியான காட்சி மாற்றங்கள் அரங்கேறத் தொடங்கி விட்டன. கோடை தொடங்குவதற்கு முன்பே தகிக்கத் தொடங்கும் வெப்பம் போல, அங்கு அரசியல் களமும் தகிக்கத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் கர்நாடகாவில் சமீபத்தில் நடந்திருக்கும் ரைடு ஒன்று பாஜகவுக்கு வெம்மையையும், காங்கிரஸுக்கு குளுமையையும் ஒரு சேர தந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
ஊழலில் சிக்கிய எம்எல்ஏ: கர்நாடக மாநிலம் தாவணக் கெரே மாவட்டம் சென்னக்கிரி தொகுதி பாஜக எம்எல்ஏ மாதல் விருபக் ஷப்பா. இவரது மகன் பிரசாந்த். இவர் கர்நாடக அரசின் மைசூரு சாண்டல் சோப் மேம்பாட்டு வாரிய தலைவராக உள்ளார். அந்நிறுவனத்தின் ரூ.3 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகளை ஒதுக்க தனியார் நிறுவனத்தாரிடம் ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த நிறுவனத்தினரும் முதல்கட்டமாக ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுக்க மார்ச் 3-ம் தேதி முயன்ற போது லோக் ஆயுக்தா அதிகாரிகள் அந்த அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அப்போது 3 பைகளில் மறைத்து வைத்திருந்த ரூ.40 லட்சம் லஞ்ச பணத்தை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் டாலர்ஸ் காலனியில் உள்ள பிரசாந்த்தின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது படுக்கை அறையில் ரூ.6 கோடியை கைப்பற்றினர். இந்த சோதனையும், பணம் பறிமுதலும் அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்திருப்பதோடு, பாஜகவுக்கு சோதனையையும் கொண்டுவந்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்