உ.பி.யில் லாரியில் பசுக்கள் ஏற்றிவந்தவர் மீது துப்பாக்கிச்சூடு

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் லாரியில் பசுக்கள் ஏற்றி வந்தவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் அவர் காயம் அடைந்தார்.

இதுகுறித்து லக்னோ நகரின் பாரா காவல் நிலைய அதிகாரி டி.பி.சிங் நேற்று கூறியதாவது: பிரேம் சிங் (50) என்பவர் புதன்கிழமை தனது லாரியில் 13 பசுக்களுடன் மெயின்புரி நோக்கிசென்றார். லக்னோ அருகே அடையாளம் தெரியாத நபர்களால் அவர் சுடப்பட்டார். இதையடுத்து பிரேம் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனை சட்டத்தின் 307-வது பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளோம். பிரேம் சிங் சுடப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இவ்வாறு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE