மகாராஷ்டிராவில் வங்கதேசத்தினர் 18 பேர் கைது

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையின் கன்சோலி பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்த ஒருவரின் திருமண நாளை கொண்டாட அந்நாட்டை சேர்ந்த பலர் கடந்த புதன்கிழமை ஒன்று கூடினர்.

அங்கு போலீஸார் திடீர் சோதனை நடத்தியதில் வங்கதேசத்தை சேர்ந்த 10 பெண்கள் உள்ளிட்ட 18 பேர் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் இன்றி ஓராண்டுக்கு மேலாக அப்பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 1946-ம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டம் மற்றும் 1950-ம் ஆண்டு பாஸ்போர்ட் விதிகளின் கீழ் 18 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE