உலகில் முதல் முறையாக மகாராஷ்டிர மாநிலத்தில் நெடுஞ்சாலையில் ‘பாகுபலி’ மூங்கில் தடுப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று கூறியதாவது: மகாராஷ்டிர மாநிலத்தில் வாணி - வரோரா நெடுஞ்சாலையில் 200 மீட்டர் தூரத்துக்கு மூங்கில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. உலகில் முதல் முறையாக நெடுஞ்சாலையில் போடப்பட்டுள்ள இந்த மூங்கில் தடுப்பு குறிப்பிடத்தக்க சாதனை. இதற்கு ‘பாகுபலி’ என பெயரிடப்பட்டுள்ளது.

இது தற்சார்பு இந்தியா நடவடிக்கையில் சிறப்பான செயல்பாடு. இந்த மூங்கில் தடுப்புகள் பல அரசு மையங்களிலும், தேசிய வாகன பரிசோதனை சாலை களிலும் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. ரூர்கியில் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி கழகத்தில் நடந்த தீ பரிசோதனை யிலும், மூங்கில் தடுப்பு முதல் தர சான்றிதழை பெற்றது. இந்த மூங்கில் தடுப்பு களை 50 முதல் 70 சதவீதம் வரை மறு சுழற்சி செய்ய முடியும்.

ஆனால், இரும்பு தடுப்புகளை 30 முதல் 50 சதவீதம்தான் மறுசுழற்சி செய்ய முடியும். இந்த தடுப்புக்கு ‘பம்புசா பால்கோ’ என்ற மூங்கில் வகை பயன்படுத்தப்படுகிறது. இதன் மீது க்ரியோசோட் ஆயில் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட அதிக அடர்த்தியுடன் கூடிய பாலி எத்திலின் பூசப்பட்டுள்ளது. மூங்கில் துறைக்கும், இந்தியாவுக்கும் இது குறிப்பிடத்தக்க சாதனை. இரும்பு தடுப்புகளுக்கு சரியான மாற்றாக இந்த மூங்கில் தடுப்பு விளங்குகிறது. இதனால் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு இல்லை. மேலும், இது ஊரக மற்றும் வேளாண் தொழிலுக்கு ஏற்றது. இவ்வாறு கட்கரி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்